Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கண்ணம்மா

பெண்ணாகி வந்ததோர் மாயப்பிசாசு!

Monday, November 28, 2005

விழி ஓ(ஈ)ரத்தில் நீ!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????விழுதுகளற்ற மரங்கள்
வேறற்று வீழும்
விதி சுழற்றும் ஆழிக்காற்றில்

வேதனை நெஞ்சம்
விரக்தியடைந்து வீழும்
விழி சொடுக்கிய கடும் பார்வையில்

நினைவுகளற்ற நெஞ்சம்
நிழல் தேடிப் போகும்
நிரந்தரமற்ற உறவின் பிரிவில்

பார்த்துக் களித்ததொரு காலம்
பழகிச் சிரித்ததொரு நேரம்
கலந்து கிடந்ததொரு பருவம்
கலைந்து போனதிங்கே இதயம்!

உறங்காத இமைகள்
உன் நினைவைச் சொல்லும்
உண்ணாத பொழுதுகள்
உன் உயிரையே நாடும்

பிரிவுத் துயரம் தனிச் சொத்தல்ல
பிரிந்து போனவர்களின் பொதுச் சொத்து!

Sunday, November 20, 2005

கல்போன்ற கணவர்கள்

கணவன் அமைவதெல்லாம்
கடவுள் கொடுத்த வரம்-அது
காதல் பகிர்ந்த கல்யாணமோ
காசு பரிமாறிய கல்யாணமோ!

காதல் செய்யும்போது கண்கண்ட தெய்வம்
கல்யாணம் ஆனதுமே அவளொரு தண்டம்
காசு கொண்டு வந்தவளும் தெய்வம்தான்
கன்னி கழித்ததும் கல்லாக்கப்படும் தெய்வம்.

வாழ்க்கையை அலங்கரிக்க பெண் வேண்டும்
வாரிசை உருவாக்கவும் பெண் வேண்டும்
வார்த்தை சுதந்திரம் மட்டும் கேட்டுவிட்டால்
வாழாவெட்டியோ விவாகரத்தோதான் விலை!

வீட்டை நிர்வகிக்க விவேகம் இருக்கலாம்
விவாதம் செய்யுமளவு விவரம் கூடாது
கண்ணுக்கு அழாகாய் மனைவி வேண்டும்
காண்போர் கண்ணிலோ விகாரமாகத் தெரியணும்

படுக்கையில் தாசியாக இருப்பதுதான்
குடும்பப் பெண்ணின் பத்தினித் தன்மையாம்
பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பேசினால்
பட்டம் கிடைப்பதோ படிதாண்டிய பத்தினி!

வாழ்க்கையோ வயசோ மாறலாம்
வந்தவளின் ஆத்மா மாறுமா?
மாறிப்போயின் மாற்றியது யார்?

Monday, October 24, 2005

கூண்டுக் கிளிகள்

காதல் கொண்ட கணவர்களே
கண்ணம்மாபோல் எமைப் பார்ப்பீரோ

பாரதியின் பாடல்கள் போல்
பாங்காய் எமைப் போற்றுவீரோ

பாதி உடல் ஈந்துவிட்டீர்
பரவசத்தில் பாவையர் யாம்

இருகரச் சிறைக்குள் எம்
இதயத்தை அடகு வைத்தோம்

பாசம் கொள்ளப் போட்டியிடுவோம்
நேசம் செலுத்த சண்டையிடுவோம்

விட்டுக்கொடுத்து விளையாடுவோம்
வீடு முழுக்க மக்கள் கொள்வோம்

பறந்து திரிந்த காலம் மறப்போம்
பறவைக்கான கூட்டில் அமர்வோம்

பாட்டியும் தாத்தனும் ஆகும் வரையும்
பரவசமாய்க் காதல் கொள்வோம்

கனவில் வந்தவள்

நேற்று என் கனவில் வந்தாய்
நிஜம்போலவே இருந்தது கண்ணம்மா

நின்று கொண்டே நிலைகுலைய வைத்தாய்
நீட்டிய கரங்களில் சிக்கிவிடாமல்.

கனவில்கூட கட்டுப்பாடுதானா
காதல் டூயட் பாடக்கூடாதா?

முறைத்துப் பார்த்தாய் பக்கம் வந்தபோது
முடிஅலைந்ததில் மோகனம் கண்டேன்

சூர்யா பட ஸ்டில் போல் வேண்டாமென்றால்
ஆர்யா படப் பாடல்போல் கேட்கக்கூடாதா?

தீப்பிடிக்க முத்தம் வேண்டாம் என்றாய்
டீக்குடிக்க சத்தம்(காசு) போதுமென்கிறாய்

பிச்சைக்காரி போல் பேசாதே
பிச்சை போட்டுவிட்டு பேசு!

தவணைக் காதல்

ஏக்கத்தினால் தூக்கம் மறந்தேன்
அடியே உன்
ஏறுக்குமாறான விழி அசைவால்.

ஒருநாள் அருகமர்ந்து அகமகிழ்வாய்
அன்று முழுதும்
உன் நினைவிலேயே உயிர் உருளும்

மறுநாளோ அந்நியனைப் பார்ப்பதுபோல்
அலட்சியமாக்கி என்னை
அலைக்கழித்து அழ வைப்பாய்

சோகத்தில் சுரத்தின்றி திரியும்போது
திரும்ப வந்து
தித்திக்கப் பேசித் திணறடிப்பாய்

அடியே பாதகி
அன்பை முழுதாய்க் காட்டாமல்
அதில் ஏனடி தவணை முறை?

Thursday, September 22, 2005

என் கன்ணம்மா

கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் நேற்று-அதைக்
கண்ணெதிரே நீ எனக்குக் காட்டு!

காற்று வெளியிடைக் கண்ணம்மா-நிந்தன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்!

என் வாயினிலே அமுதூறுதே
கண்ணம்மா
என்ற பேர்சொல்லும்போதிலே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா!
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது